18

siruppiddy
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூலை, 2014

இராசையா நவரட்ணராஐா அவர்களின் பூதவுடல் அடக்கம்


 10.07 .2014 அடக்கம் செய்யப்பட்டது
இராசையா நவரட்ணராஐாஅவர்கள் காலமானார்.அன்னார் பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட் டி வடக்கில் மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும். பலகாலம் சுவிசில் வாழ்ந்து பின்பு  சிறுப்பிட்டியில் வாழ்ந்தார் இவர் (05.07.2014) காலமானார் என்பது எமது இணைய உறவுகளுக்கு நாம் அறியத்தந்ததே,
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று நிறைவாகியுள்ளது என்பதனை
 இங்கே அறியத்தருவதோடு அவருக்கான அஞ்சலியை ஊர் வாழ் உறவுகள் சார்பிலும் உலகம்வாழ்  உறவுகள் சார்பில் கூறி நிற்கிறது
யாழ் போக்கு வரத்துச் சேவையில் நடத்துனராகவும்.
பொதுப்பணிகளில் பணிபுரிந்தவரும்
 மனித நேயம் உள்ளவரான நவரட்ணராஐா
 உங்கள் இழப்பு உங்கள் குடும்பத்தினரை
 மட்டுமல்ல உறவுகளை மட்டுமல்ல,
ஊர்வாழ் மக்களை மட்டுமல்ல
 புலத்தில் வாழும் உங்கள் நேசங்களை
 நெஞ்சுருக வைத்துள்ளது
உறவோடும் உரிமையோடும் பளகிய அன்பன்
 சிரித்த முகத்தோடு உலவிய நண்பன்
 வருத்தம் வந்ததுவோ வாழ்வைவிட்டு பிரித்ததுவோ.?
இனிக்கப்பேசியவன்
 இன்பமாய் பளகியவன்
 இயமன் அழைத்திட சொல்லாமல் போனதெங்கே ?
புலத்தில் வாழ்ந்தவன் நீ
 தாய் நிலத்தில் உறவோடு வாழ்வது மனத்தில் மகிழ்வுதர
 நிலத்தில் உயிர் போன செய்தி இணையத்தில் ஏன் ஐயா .?
வாழ்வில் பிரிவு தாங்கமுடியாத வலி
 வாழ்கைத்துணைவி பிரிந்து வாடுவது பெரும் வலி
 ஆனாலும் அன்பரே உமது ஆத்ம சாந்திக்காகவும்
 உங்கள் குடும்பத்தினர் அமைதிக்காகவும் வேண்டி நிற்கிறோம்
  

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய மேலதிக தகவலின் தொடச்சி.

       siruppiddy onriyam


          ஒன்றிய விரிவாக்கம்
இவ் ஒன்றியத்தின் விரிவாக்கம் பற்றிய கலந்துரையாடலில் நிலத்திலும் புலத்திலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன

வயோதிபர் இல்லம்
ஊரின் செயல்பாட்டுக் குழுவும் அதை முன்மொழிந்திருந்தனர். அதற்கான நிலத்தையும் தருவதா ஒப்புதல் அழித்துள்ளார். இது பற்றி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் அமர்விலும் இது ஒரு நல்ல கருத்தாக தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தாலும் அடுத்த அமர்வில் இதுபற்றிய முழுமையானமுடிவகள் எடுப்படும்.
 
  நீர்வளம் இதனையடுத்து இறுதியாக எமது ஊர்வழங்களான எந்தவழங்களையும் யாரும் தங்கள் தனித்துவமான வியாபாரநோக்கோடு வழம் அழிக்கப்படுகின்றதனால் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் தனது கருத்தைமுன்வைத்துத் தடுக்கவேண்டும் என்ற கருத்தும்
முன்வைக்கப்பட்டது. அந்தவகையில் இப்போது தலைதூக்கிநிற்ப்பது. தண்ணீர்ப்பிரச்சனை இந்தத் தண்ணீர்வழமானது எமது ஊர்வழங்கள் வாழ்க்கைமுறைகள் எல்லாமே விசாயத்தைக்கொண்ட ஊராக எமது ஊர் உள்ளபடியால் இங்கே உருவாக்கப்பட இருக்கும் தண்ணீர்சாலை கால ஓட்டத்தில் நீர் ஊற்று இல்லாமல் ஆகலாம்.
விவசாயம் செய்ய நீர் இல்லாமல் குடிப்பதர்க்கு நீர் இல்லாமல் எமது மண் உறவுகள் இருக்க நேரிடும்.அதனால் இந்த நீர் வழம் சுறண்டப்படாமல் இருக்க எமது ஊர்மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற கருத்தும்
எமது ஊர்
உறவுகள் சார்பில் இதற்கான கண்டனத்தையும் தெரிவிக்கவேண்டும் என அனைவரின் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் இந்த நீர்வளத்தை வியாபாரம் செய்ய தொழில்சாலை கட்ட முன்வந்தவர்கள் தயவு செய்து நம் ஊரில் மட்டுமல்ல பிற ஊர் நீர் வழங்கள்மேல் உங்கள் பார்வையைவிட்டு மாற்றுவழிகள் நிறையவே உள்ளது அதையோசியுங்கள். அந்தவழிகளில் நீரைச்சுத்திகரித்து மக்களுக்கு விற்பனைசெய்யுங்கள் நாங்கள் அங்கே எதுவும்கேட்கவில்லை உங்கள் வியாபாரத்தை நாங்கள்தடுக்கவும் இல்லை. எங்கள் உணர்வைநீங்கள்புரிந்துகொள்ளுங்கள் இன்று நாம் கேட்பதுபோல் நாளை ஊர்கேட்கும் பின்
உலகம்கேட்கும் அதனால் எமது தாழ்மையான வேண்டுதல் ஊர்சார்பில் முன்வைக்கும் உறவுகள்நாம் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்
கலந்து சிறப்பித்து ஆலோசனைகள் உரைத்த எம் ஊர் உறவுகளின் நல்நோக்கை புரிந்து எம் ஊர் நலன்காப்போம். ஊரின் நலம்விரும்பும்தொண்டர்கள்
ஊர் வளம் பெருகும்
உறவுகள் நலன் பெருகும்
பாரில் ஊர் நிலை உயரும்
பார்ப்பவர்களுக்கு
எம் ஊர்மேல் மதிப்பிருக்கும்
இணைந்தால் பலம்
இருக்கும் இதில் ஊர் நலம்
உரிமையுடன் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம்.
நன்றி

வியாழன், 6 பிப்ரவரி, 2014

சிறுபிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் அறிவித்தல்

சிறுபிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் முறைப்படியான முதல் நிர்வாகக்கூட்டம் நடைபெறவுள்ளது.அதற்கான அனைத்து வகை ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது.இவ் அமர்வில் சிறுபிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாகத்தில் உள்ள அனைத்து நிர்வாக  ஊழியர்களும் தவறாது கலந்துகொள்ளவும்.மேலதிக தகவல் நாளை இணைக்கப்படும்
காலம்:- 15.02.14/சனிக்கிழமை
நேரம் :- 19.00 /மாலை
இடம்:- Jugendtreff OJA  Schwamendingen 
Winterthurerstrasse 504 
8051 Zürich
தொடர்புகளுக்கு:-  
திரு .நடராசா(சுவிஸ்):
031 971 49 76/079 639 71 87

திரு .தேவராசா(ஜெர்மன்) 0231/5331577 /0176494338190

செவ்வாய், 28 ஜனவரி, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய அறிவித்தல் ஒன்று

உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளே திக்கெட்டும் திசைகள் யாவும் பரவி வாழும் எம்மூர் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாகவும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமாக எம்மூரில் வாழும் உறவுகளின் வாழ்வாராரத்தை வளம் பெற செய்யும் நோக்குடன் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியமாகிய நாம் முதற்ட்கட்ட  விரிவாக்கம் செய்துள்ளோம் .அந்த வகையில்
 திரு நடராசா(சுவிஸ் )திரு தேவராசா (ஜேர்மன் )ஆகிய இருவரின் வழிகாட்டலின் கீழ் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் தமது நடவடிக்கைகளை தொடரும் என்பதை அறியத்தருகின்றோம் ஊருக்கு பல ஒன்றியங்களும் ஊரில் பல அமைப்புக்களும் இருக்கும் நிலையில் இவைகளின் ஒன்று பட்ட செயற்பாடே  எம் கிராமத்தின் நிலையானதும் உண்மையானதுமான வளர்ச்சிக்கு வித்திடும் என்ற அனுபவ உண்மையின் வெளிப்பாடே இந்த ஒன்றியத்தின் பிறப்பு. இவ் ஒன்றியம் ஊர் ஒற்றுமையை மேலும் வலுச் சேற்க்கும்  முன்னெடுப்புக்களுக்கே   முன்னுருமை கொடுத்து செயற்ட்படும் .
சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளர்கள்
திரு .நடராசா சின்னத்துரை
siruppiddy1@gmail.com
031 971 49 76
079 639 71 87
முரளிதரன் தவேந்திரன்
043 211 97 39
ஜெர்மன் நாட்டு செயற்பாட்டாளர்கள்
திரு .தேவராசா சுப்பிரமணியம்
s.theva@web.de
0231/5331577
0176494338190
திரு  .குவேந்திரன் வேலுப்பிள்ளை
0049243386106
பிரான்ஸ் நாட்டு செயற்பாட்டாளர்
திரு.  துசீபன் மகாராஜா
thuseepan29@gmail.com
0033753667047
நோர்வே நாட்டு செயற்பாட்டாளர்
திரு .சந்திரன் செல்லையா
chandrakumarr@hotmail.com
004741243969
ஒன்றிய கணக்கு விபரங்களுக்கு
திரு அருண்  சுந்தரலிங்கம்
திரு .ராசன்   அம்பலவாணர்
மேலதிக தகவல்கள் விரைவில்  இணைக்கப்படும்

செவ்வாய், 26 நவம்பர், 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியதின் இறுதி அமர்வின் விபரம்(24.11.13)

siruppiddy

நேற்று மலை நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய  நிர்வாகக்கூட்டம் உறுதியான எமது முடுவுகளுடன் இறுதியான அமர்வை  மனநிறைவுடன் முடித்துக்கொண்டோம் என்பதை எமது உறவுகளுக்கு அறியத்தருகின்றோம். நாம் முன்னெடுத்த  பணிகள் சிறுப்பிட்டி மேற்கையும் தாண்டி இருந்ததினால் பங்களித்த உறவுகள் எமது சிறுப்பிட்டி கிராமத்தையும் தாண்டியவர்களாக இருந்ததினாலும் பதவிகள் ஏதும் இன்றி பங்களிப்பவர்களே எமது தலைவர்கள் என்ற கோட்பாட்டுடன் ஒன்றிய அத்தனை முன்னெடுப்புக்களையும் வெளிப்படையாகவும்  வரவுசெலவு விபரங்களை  சிறுப்பிட்டி இணையத்திலும் பதிவிட்டு வந்தமையால் சீராகவும் சிறப்பாகவும் செயல்பட முடிந்தது என்ற அனுபவ உண்மையை பகிர்ந்து கொள்வதுடன் பங்களித்த அத்தனை உறவுகளுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்துடன் எமது தகவல்களையும் ஒன்றியத்தின் செயல்பாடுகள் அனைத்துக்கும் ஆதரவாகவும் அரணாகவும்  இருந்து சமகாலத்தில் தனக்கே உரிய  தனிவழி நின்று ஒரு கிராமத்து இணையத்துக்கான தனது பணியை செய்வதுடன் நின்றுவிடாது எம்மீதான விமர்சனங்களையும் வெளிப்படையாக பதிவிட்டு பாதை தவறாது பயணிக்க உதவிய இந்த சிறுப்பிட்டி இணையநிர்வாகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் ஒன்றுபட்ட எமது சிறுப்பிட்டி கிராமத்தின் வளற்சியை முதற்கருவாக முன்னிறுத்தி தனது செயற்பாட்டுடன் முன்வந்திருக்கும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்புக்களையும் வழங்குவோம் என்பதை பகிரங்கமாக  உறுதிபட அறியத்தருகின்றோம்.
அமையப்பெற்றிருக்கும்  சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் முதல் நிலை செயற்பாட்டாளர்களான இரு ராசாக்களினது வழிநடத்தலின் கீழ் அந்த ஒன்றியம் சிறப்புற செயல்படும் என்பது எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.அத்துடன் வயதிலும் அனுபவத்திலும் இவர்களது  தனிப்பட்ட வாழ்வியலின் நேர்மையிலும் எமக்கு இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.
 திரு நடராசா,திரு தேவராசா மற்றும் உங்களுடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன்  நாமும் ஒன்றுபட்ட கிராமத்தின் வளற்சிக்கு இன்றிலிருந்து செயல்வடிவம் கொடுப்பதுடன் கிராமத்தின் எமது பகுதிக்கான தவிர்க்கமுடியாத சில  முன்னெடுப்புக்களுக்கும் அதற்க்கான பங்களிப்புக்களை பெற்று சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தின் ஊடாகவே செயற்படுத்துவோம் எனக்கூறி இன்றிலுருந்து எமது சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தை மன மகிழ்வுடன்  முறைப்படி தாய் ஒன்றியத்துடன் இணைதுக்கொள்கின்றோம்….நன்றி,  


         siruppiddy1

***சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியநிர்வாகம்***
((((ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு))))   

சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்:பங்களித்தவர்கள் விபரம்(19.11.2013-24.11.13)


உலகதமிழர் ஒன்றியம் கிராமத்தில் முன்னெடுத்த முதல் பணியான கணனிகள்  வழங்கும் திட்டத்தை நிறைவேற்றிய பின்னர் வெளிநாட்டு வாழ் சிறுப்பிட்டி உறவுகளிடம்  அதற்க்கான பங்களிப்புக்களை கோரி நின்றது.அதற்கமைய பங்களித்தவர்களின் விபரங்கள் இங்கு பதிவிடப்படுகின்றது.மேலும் பங்களிப்பவர்களின் விபரங்கள் இங்கு உடனுக்குடன் பதிவிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் ஒன்றியம் நன்றி பகிர்கின்றது.  தாங்களாகவே தொடர்புகளை ஏற்படுத்தி பங்களிப்புக்களை செய்த உறவுகளே உங்களுக்கு எங்கள் எல்லோரினது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

யேர்மனி (EUR)
சு.குமாரசாமி                       50.00 €r
சு.தேவராசா                        50.00 €r
சு.யெயக்குமார்                    50.00 €r
சு.தவராசா                            50.00 €r
சி.தவேஸ்வரி                       50.00 €r 
குவேந்திரன் வேலுப்பிள்ளை       100.00 €r
   
  கொலன்ட்
இராசநாயகி இரவேந்திரன்                   50.00 €r

லண்டன்
க.ஶ்ரீகண்ணதாசன்                         50.00 €r
நோர்வே (NOK)
சந்திரன் செல்லையா                   100.00
சுவிஸ்(CHF)
தவராசா சாந்தினி   150 Sf
சுதாகரன் நந்தினி                        100 Sf
சிவகுமார் பூதத்தம்பி                  150 Sf
சடாச்சரம் விநாசித்தம்பி            50 Sf
முரளிதரன் தவேந்திரன்            50 Sf
புஸ்பநாதன் அம்பலவாணர்      50 Sf
நேமிநாதன்  இராசலிங்கம்           50 Sf
இலட்சுமிகாந்தன் கவிதா           100 Sf
நடராசா சின்னத்துரை                100 Sf
ராசன்   அம்பலவாணர்               100 Sf
அருண்  சுந்தரலிங்கம்                100 Sf
விமல்   குமாரசாமி                      100 Sf
 பரதலிங்கம் பாக்கியவதி 100 Sf
 அருளம்பலம் ஐயாத்துரை   50 Sf
 தேவன் துரைராசா    50 Sf
யோகராஜா சின்னத்தம்பி                        50 Sf
 வன்னிஉறவு ஒன்று   21 SF  
    தேவராசா சுப்பிரமணியம்   50 €r
 ஈசன் குமாரசாமி   50 Sf
சுகந்தி குமாரசாமி 100 Au $
ராசன் அம்பலவாணர் 100 Sf த.பிரபாகரன்/ரூபா    15,000 Rs
த.பிரபாகரன்/ரூபா    15,000 Rs
கு.நகுலன்/ரூபா  100,000 Rs
ந.ஏழுமலைநாதன்/ரூபா    43,186 Rs
ஐ.அருளம்பலம்/ரூபா     71,750 Rs
இ.சரஸ்வதி(சுவிஸ்,ஜெர்மனி,கனடா) 300,000  Rs
ஐ.குணசேகரம்(மகள்+மகன் சுவிஸ் )  115,200  Rs



   
தரவுகளில் தவறிருப்பின் உரியவர்கள்  அறியத்தரவும் திருத்தப்படும்

திங்கள், 18 நவம்பர், 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்று



சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தரும் தகவல் ஒன்று
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24.11.13) மலை ஏழு மணிக்கு  சிறுப்பிட்டி இணையக்காரியாலத்தில் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தினரின் நிர்வாகிகள்  இறுதிக்கூட்டம் நடை பெறவுள்ளது.
நாம் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கும் முடிவின் படி எமது நிர்வாகம் கலைக்கப்பட்டு சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியத்தினருக்கு எமது ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கி ஒன்றுபட்ட முழுக்கிராமதுக்குமான முன்னெடுப்புக்களுக்கு வலுசேர்க்கும் வண்ணம் செயல்பட இருப்பதினால் எமது மாதாந்த 50sf பங்களிப்புக்களும் நிறுத்தப்பட்டு இறுதி கணக்கு விபரங்களும் சரிபார்த்து ஒப்புக்கொண்ட சிலர் தங்கள் இந்தவருடதுக்கான நிலுவைகளையும் சீர் செய்து செய்துகொள்ளும்படிகேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நாம் செய்த     பணிகளை மீள் பரிசீலனை செய்வதுடன் எமது ஒன்றியத்தின் இந்த இறுதி அமர்வுக்கு ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் சமூகம் அளிக்கும் படி அன்புடனும் நன்றியுணர்வுடனும் கேட்டுக்கொள்கின்றோம்.
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்
 

சனி, 16 நவம்பர், 2013

சிறுப்பிட்டி ஒன்றிய அறிவித்தல் ஒன்று..



**சிறுப்பிட்டி ஒன்றியம் ** 


உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளே திக்கெட்டும் திசைகள் யாவும் பரவி வாழும் எம்மூர் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாகவும் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலமாக எம்மூரில் வாழும் உறவுகளின் வாழ்வாராரத்தை வளம் பெற செய்யும் நோக்குடன் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியமாகிய நாம் முதற்ட்கட்ட  விரிவாக்கம் செய்துள்ளோம் .அந்த வகையில்
 திரு நடராசா(சுவிஸ் )திரு தேவராசா (ஜேர்மன் )ஆகிய இருவரின் வழிகாட்டலின் கீழ் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் தமது நடவடிக்கைகளை தொடரும் என்பதை அறியத்தருகின்றோம் ஊருக்கு பல ஒன்றியங்களும் ஊரில் பல அமைப்புக்களும் இருக்கும் நிலையில் இவைகளின் ஒன்று பட்ட செயற்பாடே  எம் கிராமத்தின் நிலையானதும் உண்மையானதுமான வளர்ச்சிக்கு வித்திடும் என்ற அனுபவ உண்மையின் வெளிப்பாடே இந்த ஒன்றியத்தின் பிறப்பு. இவ் ஒன்றியம் ஊர் ஒற்றுமையை மேலும் வலுச் சேற்க்கும்  முன்னெடுப்புக்களுக்கே   முன்னுருமை கொடுத்து செயற்ட்படும் .
சுவிஸ் நாட்டு செயற்பாட்டாளர்
திரு .நடராசா சின்னத்துரை
031 971 49 76
079 639 71 87
ஜெர்மன் நாட்டு செயற்பாட்டாளர்கள்
திரு .தேவராஜா சுப்பிரமணியம்
s.theva@web.de
0231/5331577
0176494338190
திரு  .குவேந்திரன் வேலுப்பிள்ளை
0049243386106
பிரான்ஸ் நாட்டு செயற்பாட்டாளர்
திரு.  துசீபன் மகாராஜா
thuseepan29@gmail.com
0033753667047
நோர்வே நாட்டு செயற்பாட்டாளர்
திரு .சந்திரன் செல்லையா
004741243969
ஒன்றிய கணக்கு விபரங்களுக்கு
திரு அருண்  சுந்தரலிங்கம்
திரு .ராசன்   அம்பலவாணர்
மேலதிக தகவல்கள் விரைவில்  இணைக்கப்படும்

புதன், 16 அக்டோபர், 2013

சிறுப்பிட்டி பூமகள் நிர்வாகத்தினருக்கு நன்றி..

siruppiddynet (3)

   இந்த இணையத்துக்கு ஒரு உறவு சிறுப்பிட்டி மேற்க்குப்பகுதிக்குரிய இந்து மயானத்தின் புகைப்படத்துடன் கூடிய நிலைமையை தனது மனவருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.இணையம் பதிவிட்ட சில நாட்களில் பூமகள் சனசமூகநிலைய நிர்வாகம் அத்தகவலை கருசனையுடன் நிறைவேற்றி புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர்.

siruppiddynet (1)

siruppiddynet (2)

siruppiddynet (4)

siruppiddynet (5)

siruppiddynet (6)

siruppiddynet (7)
siruppiddynet (8)

அந்த உறவுடன் இந்த ஊர் இணையமும் நன்றி பகிர்கின்றது.
மேலும் மழை காலங்களில் நிகழும் மரண இறுதிச்சடங்க்குகளை முறையாக செய்வதற்க்கு இது போன்ற கொட்டகையின் தேவையை ஒரு உறவு இணையத்துக்கு தெரிவித்து இருக்கின்றார்.. siruppiddy
 
சனசமூகநிலைய நிர்வாகத்தினர் அதன் தேவையின் முக்கியத்தை கருத்தில் எடுத்து உங்கள் கருத்தையும் தெரிவிக்கவும். கிராமத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு சங்கமிக்கும் நல் மனங்களுடன் இணைந்து செயல் வடிவம் கொடுப்பது உங்களைப்போன்ற கிராம முன்னேற்ற சங்கங்களின் கடமையும் கட்டாயமுமாகின்றது.
 
அந்தவகையில்  உங்களுக்கு கரம் கொடுக்க தொடர்புகளை ஏற்ட்படுத்த இந்த சிறுப்பிட்டி இணையம் காத்திருக்கின்றது.சிறுப்பிட்டி உறவுகளே உங்கள் தேவைகளை இந்த மின்னஞ்சலுக்கு ஆதார பூர்வமாக அனுப்பி வையுங்கள்.இந்த இணையம் ஊருக்கானது ஒரு பகுதிக்கானது இல்லை.
நன்றி :இணைய நிர்வாகம்.        infosiruppiddy@gmail.com

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு



ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு(06.09.13)
சிறுப்பிட்டி மேற்கு .. ஸ்ரீ ஞாவைரவர் ஆலயத்தின் தேவஸ்தான மண்டப புனரமைப்பு வேலைகள் தொடந்து நடைபெற்றவண்ணம் உள்ளதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணியளவில் ஆலைய உள் மண்டபத்தின் தீராந்தி வைக்கும் நிகழ்வு நடை பெறவுள்ளது .அத்தருணம் இறை அடியவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து புனரமைப்பு மற்றும் விஷேட பூஜைகளிலும் கலந்து வைரவப்பெருமானின் அருளை பெற்றுக்கொள்ளுமாறு உருமையுடன் ஆலைய நிர்வாகத்தினர் அழைக்கின்றனர்.


 

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்

செயற்பாட்டுடன் அறிமுகமாகும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்
சிறுப்பிட்டி ‌மனோன்மணி அம்மன் ஆலையத்தின்  இளையதம்பி குடும்பத்தினரால் நடைபெற்ற  சப்பறத்த்திருவிழாவில் அவர்கள் ஒத்துழைப்புடன் எமது ஊரின்  ஒன்றுபட்ட முன்நேற்றதை கருத்தில் கொண்டு   மூன்று வாசிகசாலைக்கு தலா  ஒவ்வொரு கணனிகள்  முதல் கட்டமாக வழங்கப்பட்டது.   இதை நீகள்கள் இந்த இணையப்பதிவில்  பார்க்கலாம்.  இந்தச்செயல் பாட்டுடன்

 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் செயல்பாட்டுக்கு வருகின்றது  என்பதனை  எமது உறவுகளுக்குத்தெரிவித்துக்கொள்கிறோம்.அத்தோடு சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் அன்பான வேண்டுதலை நிறைவேற்றிய அம்மன் ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் திருவிழா உபயகாறர்களான இளையதம்பி குடும்பத்தினருக்கும் இங்கிருந்து சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தால் பெருள்கள் வழங்க நிதியுதவி வழங்கிய  உறவுகளுக்கும் அதை ஆலயவிழாவில் செயல் வடிவாக்கிய பொதுத்தொண்டர்கள் ஸ்ரீஅண்ணருக்கும் அவர்மகன் சுரேனுக்கும் திரு கோடிஸ் வரன் அவர்தம் துணைவியார் அருந்தவதேவிக்கும்
 எமத உளமார்ந்த நன்றிகள்.

இந்த சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்   எமது ஊர்சார்  நலன் கருதி என்றும் ஊர் ஒற்றுமையை முன்னிறுத்தி  செயலாற்றும்  என்பதை  இங்கே உறுதிப்படுத்திக்கொள்கிறோம்

ஊர்வளம் காப்பது எம் கடமை  வீண்   வார்தைகள்  பேச்சோடு போக
செயலாற்ற வாருங்கள்  இணைந்தால் ஊர்வளம் நன்று ஆகும் வாருங்கள் இணைவோம் செயலாற்றுவோம் இது உங்களது.உலகத்தமிழர் ஒன்றியம்
ஒன்றிய விரிவாக்கம் ,தொடர்பாடல் அடுத்தகட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும்.
சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம்,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!
!முக்கியகுறிப்‌பு!!!தயவுசெய்து மன்னிக்கவும்இன்நிகழ்வில்அம்மன்பூங்காவானத்தின்திருவிழாவின் காணொளியைஇனைத்தால்மிகவும்
சிறப்‌பாகஇருக்கும்அன்புடன்.நிலாவரை,கொம்.நன்றி. {காணொளி}


அங்கு வாசிக்கப்பட்ட தகவலின் எழுத்து வடிவம்
 சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியம் ஆனது எமது ஊரின் திசைகளைவைத்து பிரிவினை பார்காது தனித்துவமாக எமது ஊரின் நலனுக்காகவே செயல் ஆற்ற உள்ளது.

இதில் எமது ஊர்களை இணைக்கும் வண்ணம் இருக்க வேண்டியது முக்கியமானது மட்டுமல்ல இணைந்த செயல்பாடு நம் ஊர் வளர்ச்சிக்கும் சிறப்பைத்தரும் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்வோம் பழமை வாதிகளின் செயகளை மறந்து ஊரின் நல் நோக்குக்காய் இணைந்து பயணிப்போம்!
இக் கணனித்திட்டமானது எமது ஊர் சிறார்களின் படிப்பை முன்னோக்காகக் கொண்டு முன்வைத்த திட்டமாகும்.

முக்கிய குறிப்பாக இங்கே நாங்கள் எமது முன்னோர்கள் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டவில்லை ஆனால் உதாரணப் படுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம் பல கல்விமான்கள் வாழ்ந்த எமது ஊர் ஆனால் அவர்களால் எமது ஊருக்கு என்ன நன்மை கிட்டியது? யாருக்காவது இலவசமாக பாடம் கற்பித்து எங்கள் ஊரவரை முன்னேற்றினார்களா?
இல்லை! அதனால் நாம் வாழும் போது எது ஊருக்காய் ஏதாவது செய்வோம் அதுவும் இணைந்து செய்வோம என்ற

 நோக்கில் உருவாக்கப் பட்ட திட்டமே இந்தக் கணனிகள் வழங்கும் திட்டம்
 இதற்கு நிதி வளங்கியவர்கள் ஏதோ பணத்துக்கு மேல் படுத்திருந்து தான் இதைச் செய்ய முன் வந்ததாயும் நினைக்காதீர்கள் இங்கும் கஸ்ரங்கள் உள்ளது அதர்கு மேல் எமது ஊரை வளப்படுத்தும் பணியும் எம்மிடம் உள்ளதால் தான் இந்தத்திட்டம்!

இந்தக் கணனிகளானது எமது ஊர் சிறார்கள் கற்பித்தல் விரிவடையும் நோக்கில் முன் எழுத்த நோக்காகும். இது ஆரம்பமே இன்று எங்கு பார்த்தாலும்
 கணனிமயம் இதற்கு எது ஊர் பிள்ளைகள் ஈடு கொடுப்பதானால்
 அவர்களுக்கு கிழமையில் ஒருநாளோ அல்லது இரண்டு நாளோ அது பற்றி ஆளுமை உள்ள இளைஞர்கள் முன் வந்து கற்பித்தல் வேண்டும் என்பது எமது நோக்கமாகும் அத்தோடு உங்களால் முடிந்தால் முதியவர்களுக்கும் கணனி ஆழுமையை கற்றுக்கொடுக்கலாம!

அத்தோடு இவற்றின் பணிகளில் ஒன்றாக எமது ஊர்களின் அதிகார பூர்வமான இணையமான சிறுப்பிட்டி நெற்றுக்கு ஊரில் உள்ள அனைத்துக் கோவில்விழாக்காள் பொது நிகழ்வுகள் நன்மைகள் தீமைள் எவையாக இருந்தாலும் தகவல் பரிமாற்றாம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
எமது ஊருக்கு இருக்கும் இணைய பலத்தால் எமது ஊரின் புகழ் பரப்பி இணைந்து வாழ்வோம்

 முக்கிய குறிப்பு இந்தக் கணனிகள் ஆனது தனிப்பட்ட பாவனைக்கு அனுமதிக்கப் படமாட்டாது. இவற்றைக் கவனிக்கும் பொறுப்பு அண்ணர் ஸ்ரீகந்தராஜாடமும் கோடீஸ்வரன் அவர்களிடமும் உள்ளது.
ஒன்றிய மேலதிக தகவல்கள் மிக விரைவில் அறிவிக்கப்படும்
இப்படிக்கு சிறுப்பிட்டி உலகத் தமிழர் நிர்வாகம்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

உலகவாழ் உறவுகளுக்கான தகவல்

 


                                      ammanKovil
உலகவாழ் அனைத்து  சிறுப்பிட்டி உறவுகளுக்கு வணக்கம்..  இன்றுவரை  நம் ஊரின் நலன்  விரும்பி உழைத்த  எல்லோருக்கும்  ஓர் மகிழ்வான நாள் மட்டுமல்ல  ஒரு சிறப்பான  நாளும் கூட. எங்கள் ஊராம் சிறுப்பிட்டி மண்னின்   வரலாறு மிக்க அம்மன்  ஆலையத்தில் புதிய சப்பறம் செய்து  திருவிழா நடைபெற்றது.
அத்தருணம்   உங்கள்   சிறுப்பிட்டி உலகத்தமிழர்  ஒன்றியமானது ஊரை இணையக்கவும் இணைந்து செயலாற்றவும்   எமது எதிர்காலச் சந்ததியினரின்  கணனி ஆழுமையை உயர்தும் நோக்கிலும் முன் எடுக்கப்பட்டு இன்று  அம்மன் ஆசியோடு மூன்று  வாசிகசாலை நிர்வாகத்தினரிடமும்  அம்மன் ஆலயத்திருவிழாவில்வைத்து முறையே ஒவ்வொரு  கணனிகள் முதல் கட்டமாக  வழங்கப்பட்டது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய  அனைவருக்கும்  நன்றிகள்.  இது போன்ற  நற்பணிக்கு உதவிக்கரம் நீட்டவோ  அன்றில் இணைந்து செயல்  வடிவம் கொடுக்கவோ ஆர்வலர்கள் எம்மோடு இணைந்து செயலாற்ற கரம் கூப்பி அழைக்கிறோம்.
இது ஒரு தனிப்பட்டவர்  சம்மச்தப்பட்ட விடையமல்ல அவனது? இவனது? என்ற பிரிவினை இல்லாது  எமது ஊரின் சிறப்புப்பணிக்காய் தோன்றியது என்பதை உணர்வோம்.  சிறுப்பிட்டி உலகத்தமிழர்  ஒன்றிம் இது முழு சிறுப்பிட்டி மக்களின் ஒற்றுமையுடன் கூடிய நலனில் அக்கறை கொண்டு நடைமுறை செயல் பாட்டுடன்  உலாவரும்    இணையுங்கள்  இருக்கும் போது ஊரின் சிறப்புக்காய் உழைப்போம்.  அந்த உழைப்பால் எதிகாலச் சந்ததிகள் சிறக்கும்.siruppiddy onriyam
சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினரின் இந்த முதல்கட்ட செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு அளித்த கோவில் நிர்வாகத்தினருக்கும்   கூறிப்பாக இதன் சிறப்புக்காய் மண்ணில் இருந்து  செயல் புரிந்த பொதுநலத் தொண்டன் ஸ்ரீ அண்ணருக்கும்   பொதுநலத்தொண்டர்கள் திரு:கோடிஸ்வரன் அவர் துணைவியார் அருந்தவதேவிக்கும்   இளைதொண்டன்   தம்பி சுரேனுக்கும் எங்கள் சார்பில் நன்றிகள்.
இணைவோம்   பலம்வரும்
சிந்திப்போம்     பலன் வரும்
செயல்படுவோம் பயன் வரும்
பின்குறிப்பு :சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் எதிர்கால முன்னெடுப்புக்கள், அதன் கட்டுமானங்கள், நிர்வாகத்தினரின் அங்கத்தவர் விபரங்கள் , தொடர்புகளுக்கான வழிவகைகள் ,கிராமத்தில் இருக்கும் செயல் செயல்பாட்டாளர்கள் விபரம் போன்ற முக்கிய தகவல்கள் விரைவில் அறியத்தரப்படும்

திங்கள், 15 ஜூலை, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் !!!

 
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் கட்டுமான தகவல் ஒன்று
1சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர் தேவஸ்த்தான கட்டுமான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது  அதற்க்கான பங்களிப்பை  புலம் பெயர்வாழ் சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் அடியார்களிடம்  வைரவர் நிர்வாகம்  வேண்டி நிற்கின்றது.  சுவிஸ் மற்றும்  சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் மெய்யடியார்களிடமும்  பங்களிப்பை பெற்று  ஞான வைரவர்  நிர்வாகத்தினரிடம் உரிய நேரத்தில் உதவிடும் நோக்குடன் ஏற்கனவே ஒரு வழி செய்யப்பட்டு இணையத்திலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
 .இருந்தும் நாம் விரும்பும் வகையிலும் விரைவும் இல்லாத காரணத்தாலும் எம் கிராமத்து இளைஞர்களின் முன்னெடுப்பை தொய்வின்றி அவர்கள் தொடர்பதற்க்காக்கவும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் தனது இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் பொறுப்பெடுத்து நிதியினையும் பெற்று வருகின்றது  .வரும் நாட்களில் நாம் நேரடியாகவும் தொலை பேசியூடாகவும் எம்மால் முடிந்தவரை தொடர்புகொள்வோம் .ஸ்ரீஞான வைரவ மெய்யடியார்கள் உங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்தி கட்டுமான பணியினை விரைவுபடுத்துங்கள் .
விரைவான தொடர்புகளுக்கு :-
                        அருண் :079 671 07 88
                        விமல் : 078 603 37 05                         
இதுவே சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் என்ற நாமத்துடன் முன்னெடுக்கும் இறுதிப்பணி புனிதப்பணியும் கூட .


வெள்ளி, 5 ஜூலை, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாக அறிவித்தல்கள்


சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகத்தினரின் கலந்துரையாடல் வரும் (07.07.13)ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது .நிர்வாக அங்கத்தவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர்  ஆலைய கட்டுமான பணிக்கான பங்களிப்பு ,வன்னிச்சிறார்களுக்கான அடுத்த கட்ட  பங்களிப்பு ,சிறுப்பிட்டி ஒன்றியத்தின்  வருங்கால திட்டமும் செயல் பாடுகளுக்கான விரிவாக்கம் ,மற்றும்  சிறுப்பிட்டி கிராமத்தின் நலன்சார்ந்த மேலதிக விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டும்.
நிர்வாகக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளே வழமை போல்  இறுதியானது. உறுதியுடன்  நடைமுறைப்படுத்தப்படும்.

வியாழன், 9 மே, 2013

இறப்புத்தகவல் "திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி


சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை கோவிந்தசாமி அவர்கள் 08.05.2013 அன்று இறைவன் பதம் சென்றார்அன்னார்காலம் சென்ற வேலுப்பிள்ளை சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலம் சென்ற ருக்குமணியின் அன்பு கணவரும்,அப்பாத்துரையின் அன்பு சகோதரனும்,குணமணி,கோமதி,ராசதேவி,சிவமலர்,பிரேமா, சந்திராதேவி,காலம்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,காலம் சென்ற பாலசுப்பிரமணியம், தவலிங்கம் ,ஆனந்தசிவம்,பாலேந்திரம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
டினோசன் ,வைதேகி (லண்டன்)குனேஸ்வரி யானராஜ் (பிரான்ஸ் )சுரேஷ் மாலவி (பிரான்ஸ்)ரமேஸ், ரேணுகா,தமேஸ்,ராதிகா .கவிராஜ்,தனராஜ் தசதேவி கமலராஜ் (பிரான்ஸ்) தரன்(பிரான்ஸ்)தனுசன்,விதுசா,விதூசன்,யதீசன், துசிந்தா,துசாங்கன்,நவஜீவன் (பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு பேரனும்.
விதுசன்,தர்னி,பிரியங்கா,பிரிதிகா ,பிரிதிவ்,சுவிர்த்தன் ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (09.05.2013) வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மைதானத்துக்கு எடுத்து செல்லப்படும் .இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .

தொடர்புகளுக்கு .
குனேஸ்வரி ஞானதாஸ் (பிரான்ஸ்) 0033 751 382 369
தசதேவி கமலராஜன் (பிரான்ஸ்)
சுரேஸ்
ஜீவன் (பிரான்ஸ்)0033 652 434 137
தரன் (பிரான்ஸ்) 0033 652 480 553

திங்கள், 6 மே, 2013

இனிதே நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம்""

இன்று (05.05.13)மிக முக்கியமான கிராம நலன் சார்ந்த ஒன்றியத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அத்துடன்.ஒன்றிய பொறுப்புக்கள் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. வருங்கால ஒன்றிய செயல்பாடுகளும் இருப்பில் இருக்கும் பணத்தில் கிராமத்தையும் தாண்டிய ஒரு நற் திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.சிறுப்பிட்டி கிராமத்தில் நடந்துகொண்டிருக்கும் நற் திட்டத்துக்கு ஒன்றியத்தின் ஆதரவையும்
.பங்களிப்பை வழங்குவதுடன் கிராமத்தில் தங்கள் தனிப்பட்ட புகழுக்கும், வரும்படிக்காக கிராமத்தை ஒரு தளமாக பயன்படுத்துபவர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளுக்கு சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியத்தின் விரிவான நிலைப்பாடும் மிக விரைவில் இணையத்தில் பதிவிடப்படும் மிகுதி மிக விரைவில்
சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்இனிது...இனிது...


"அறியாமை இனிது
அனைத்தும் அறிந்த
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன்
அறியாமை இனிது...!

பேசாமை இனிது
பேசியும்
சாமான்யன் பேச்சு என்பதால்
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே
பேசாமை இனிது...!

செல்லாமை இனிது
சென்றால்
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும்
பித்தர் முன்னே
வேலைக்குக் கூட
செல்லாமை இனிது ...!

ழுதாமை இனிது
எழுத்தினால்
சாதிக்க பல இருந்தும்
சாமான்யன் எழுத்து
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே
எழுதாமை இனிது...!

ஞாயிறு, 5 மே, 2013

இசைத்தென்றலும் ஒரு இசைத்திலகமும் சந்திப்பு""

ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது இந்த இணையப்பதிவுக்கும் ஏன் இந்த இணையப் பார்வையாளருக்கும் மகிழ்வைத் தரக்கூடியதாகும்அவர் வேறுயாருமல்ல கிந்தி இசைத்திலகம் அன்ரன் டேவிற் அவர்கள் இவர் ஈழத்து உறவுகளுக்காக கலைநிகழ்வை நடத்த நோர்வே நாட்டில் இருந்து யேர்மனி வந்து யேர்மனியில் நடைபெற இருந்த கலை நிழ்வுக்கு நண்பன் மணிக்குரல் தந்தமுல்லைமோகன் அவர்களை அறிவுப்புத்துறைக்கு அவர் சம்மதம் பெற டோட்மூண்ட் நகருக்கு வந்திருந்தபோது
 நண்பன் முல்லைமோகன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசாவைப்பற்றிக் கூறவே…தொடர்க

வெள்ளி, 3 மே, 2013

சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகக்கூட்டம்

 
 சிறுப்பிட்டி மேற்கு ஒன்றிய நிர்வாகம்எதிர்  வரும் (05:05:13)ஆம் திகதி ஞாயிற்று கிழமை  மாலை(19:00)ஏழு மணிக்கு சிறுப்பிட்டி இணைய காரியாலத்தில் ஒன்றிய ஒன்று கூடல் இடம்பெற இருக்கிகின்றது .ஒன்றிய நிர்வாகத்தினர் தவறாது கலந்து கொள்ளவும்.தவிற்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்ட எமது ஒன்றுகூடல் கிராமத்தின் இன்றைய நிலைமை கருதியும் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான விவாதத்தின் பின்னர் விரைவான சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
 தகவல்.சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதியின் கண்ணீர் அஞ்சலி





                                          அமரர் திருமதி சுப்பிரமணியம்,பூபதி
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜேர்மனி.டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் கொன்ட எங்கள்அண்ணை பூபதிக்கு நம் எல்லோரின் கண்ணீர் அஞ்சலி ,, சமர்பணம் "" 
ஆனித்திங்களில் சிறுவையூர் பெற்ற பூபதித்தாயே சித்திரைத்திங்களில் சிவபதம் அடைந்தீரோ மரணம் உமக்கென்றும் நல்லமைதிதானன்றோ ஆனாலும் உறவுகள் தவிப்பு தாங்கலையே தாயே மறைந்தீரோ

சிறுப்பிட்டிமண்ணில்பூத்த நல்ல பூபதித்தாயே சுப்பிரமணியவரின் மணவாட்டி நீர் பெற்றதும் பிள்ளைகள் ஆறு ஆறுமுகன் அருளன்றோ இன்று வாழ்ந்தது போதுமென்று விண்ணுலகம் சென்றீரோ

சாமி தேவா ஜெய தவா உனை காவத்தான் பெற்றீரோ பெற்றமக ஸ்வரிகள் துவண்டே போனாரே பேரப்பிள்ளைகள்தாம் கண்ணீரில் துடித்தனரே உற்றார் உறவினரும் தவிக்கவிட்டு தாயே மறைந்தீரோ

சீரும் சிறப்பும் சிறந்தே ஜேர்மன் வரை வாழ்ந்தவரே அன்பும் பாசமும் அனைவருடனும் அளவின்றி பகிர்ந்தவரே வாழந்;தது போதுமென வையகம்சென்றீரோ இல்லை சுப்பிரமணியவரின் தனிமைபோக்க தாயே சென்றீரோ பூபதித்தாயே தாயே

பிறப்பும் இறப்பும் இறைவன் கணக்கு புரிந்தது ஊர்கூடி ஒலிக்க அழுதிட்டு பேரினை நீக்கி பிணமென பெயரிட்டு ஈமைக்கிரியை செய்து சுட்டிட்டு வந்தாரோ நீரில்முழ்கி நினைப்பிழந்து வாழ்வோராக எல்லாம் சிவமயமே

ஏற்றகடமை யாவும் செய்து இறை இட்ட கடமையேற்று நிறைவுடன் அமரரான பூபதிஅம்மா  சிவபத பெருவாழ்வு வாழ்வாய் அம்மா அன்புத்தாயே உங்கள் ஆத்மா சாந்தியடைய இரைவனைப்பிராத்திக்கின்றோம் **ஓம் சாந்தி !சாந்தி !!சாந்தி !!! ஆற்றணாத்துயரத்துடன் வாடும் பிளைகள் உற்றார்  உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்

 தகவல்கள்""-சுவிஸ் -ஜேர்மன்- நண்பர்கள் –
சிறுப்பிட்டிமேற்கு - நவற்கிரி உறவுஒன்றியம் –  நவற்கிரி .கொம் -சிறுப்பிட்டிநெற் -நிலாவரை .கொம்- ஆணைக்கோட்டை.கொம் - தாவடி.கொம்-  எஸ்.ரி.எஸ்.ஸ்டுடியோ .கொம்- நீர்வேலி.கொம்-  தரவு .கொம் உழவன் நெற் ,  ஈழம் .கொம்  ஆகிய உறவு இணயங்கள் சார்பாக,,,, !!அன்பேசிவம்!!! 

மாதா வின் பாடல்கள்