18

siruppiddy

வெள்ளி, 3 மார்ச், 2023

நினைவஞ்சலி 1ஆம் ஆண்டு அமரர்.திருமதி குமாரசாமி தவரத்தினம் 04.03.23

தோற்றம்.13 06 1931-மறைவு-04 03 2022
யாழ் கொக்குவிலைப் பிறப்பிடமாகவும்  சிறுப்பிட்டியில்மேற்கில் வசித்தவரும் தற்போது ஊரெழுவை வாழ்விடமாக கொண்டிருந்த  திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின்
அன்னார் காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் .04.03.2023.சனிக்கிழமை .இன்று  . 
 அன்பு மனைவியும் காலஞ்சென்ற லிங்கம் மற்றும் ஈசன்  சிவா விமலன் நகுலன் ஜெந்தி   வசந்தி சாந்தி சுகந்தி ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>முதலாம் ஆண்டு 
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

இந்த இணையத்தின் கண்ணீர் அஞ்சலி
    அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல்: குடும்பத்தினர்


 

மாதா வின் பாடல்கள்