18

siruppiddy

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி:அமரர் ஐயாத்துரை குணசேகரம்

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை குணசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும்
ஞானச்செருக்கும் அவனியில்
எவருக்கும் அஞ்சாது அன்பாலும் பண்பாலும்
அனைவரையும் அரவணைத்த எம் அன்புத்தெய்வமே!

கண்மூடித்திறக்கும் நேரத்தில் எங்களைத்
தவிக்கவிட்டு நிரந்தரமாக பிரிந்தீர்களே
உங்களுக்கு நிகர் எங்களுக்கு யார்?
மீண்டும் ஒருமுறை திருமுகம் காண
உள்ளம் கிடந்து பரிதவிக்கின்றது அப்பா!

என்றும் நாம் மறக்கமாட்டோம்
உம்மை நினைத்தே நாமிங்கு வாழ்கின்றோம்
உத்தமரே பெற்றிடுக சாந்தி எம் வாழ்வில்
நீங்கள் இல்லை என்ற எண்ணம் எமக்கில்லை
வாழ்வீர் எம்மனதில் நாம் வாழும் காலம்வரை!

உங்கள் பிரிவால் துயருறும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை 01-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும், இந் நிகழ்வில் கலந்துக்கொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறும் அனைவரையும் அழைக்கின்றோம்.
தகவல்
சிவரூபி(சுவிஸ்)
தொடர்புகளுக்கு
சிவரூபி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778209039

ஸ்ரீசங்கர்(சுவிஸ்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765290200
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் இந்த இணையமும்  நவக்கிரி,நிலாவரை இணையங்களும் இறை வனைபிராத்திக்கின்றனர் .... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி உறவினர்கள்  நண்பர்கள் ,  தகவல் குடும்பத்தினர்


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மாதா வின் பாடல்கள்