18

siruppiddy

சனி, 8 ஜூன், 2013

பயணிகளிடம் அபராதம் வசூலிக்கும் சுவிட்சர்லாந்து


 சுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டுப் பயணிகள் வாகனங்களை ஒட்டும் போது அரசு குறிப்பிட்டுள்ள வேக வரம்பை மீறினால் அபராதம் செலுத்துதல் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சொந்த நாட்டிற்குத் திரும்பியிருந்தாலும் அவர்களது வீடு தேடி இந்த உத்தரவுக் கடிதம் தரப்படுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து, இதுபோன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இந்தியப் பயணிகளிடமும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, 9 ஆயிரம் முதல் 53 அயிரம் வரையிலான அபராதத் தொகைகள் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவு, சர்வதேச காவல்துறையின் குழுவாக செயல்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் நீதிமன்ற உத்தரவுகள் இவர்களுக்கு அனுப்பப்படும். இங்குள்ள அயல்நாட்டுக் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளில் ஒப்புவிக்கும் பிரிவு, இந்த உத்தரவுகளை உரியவர்களிடம் சேர்க்கும்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்