18

siruppiddy

ஞாயிறு, 30 ஜூன், 2013

ஸ்ரீஞான வைரவர்:கட்டுமானப்பணிப்புகைப்படங்கள்



சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான வைரவர்  ஆலைய கட்டுமானப்பணிகள்  வருட திருவிழாக்கள் முடிந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆலய வெளி மதில் வேலைகள் தற்பொழுது  நடைபெற்ற வண்ணம் உள்ளது .இன்றைய புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பதிவிடப்படுகின்றது .
                                                         

ஞாயிறு, 23 ஜூன், 2013

பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானுகா

 
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் கொலண்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி யானுகா தனது மூன்றாவது (24.06.13) பிறந்தநாளை தனது இல்லத்தில் தம்பி வேனுயன் தங்கை ஸ்ருதிகாவுடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துபவர்கள்
அப்பா அம்மா சிறுப்பிட்டியில் வசிக்கும் அப்பம்மா ..ஜேர்மனில் வசிக்கும் அம்அப்பா அம்மம்மா . சிறுப்பிட்யில் வசிக்கும் மாமா .அத்தை மச்சாள்மார்… ஜேர்மனில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அக்காமார் . கனடாவில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணாமார் அக்கா . சுவிசில் வசிக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணர்மார் .. கனடாவில் வசிக்கும் மாமா அத்தை மச்சாள் மார் .லண்டனில் வசிக்கும் மாமா மாமி மச்சான் மச்சாள், லண்டனில் வசிக்கும் மாமா மற்றும் அனைத்து உறவுகளும் யானுகவை வாழ்த்துகின்றனர்.
செல்வி  யானுகாவை உறவு இணையங்களும்  நோய் நொடியின்றி, பல்கலைகளும் கற்று  பார் போற்றும் வித்தகியாக வளம்பல பெற்று பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றோம்,
{காணொளி }

டோட்முண்ட் சிவன் திருவிழாவிபரனப்பதிவு!,,,,

மெய்யடியார்களே!
ஐரோப்பாக் கண்டத்தில் ஜேர்மன் திருநாட்டில் சகலவளங்களும் சூழப்பெற்ற நோட்றைன் வெஸ்ற்பாலின்
 மாநிலத்தில் அறிஞர்கள் சான்றோர்கள சமய சமூகப் பற்றாளர்கள கலைஞர்களையும் தன்னகத்தே கொண்ட டோட்முண்ட் நகரத்தில் கொம்புறுக் என்னும் கிராமத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவன்மஹோற்சவம் 13.07.2013ஆரம்பமாகி தொடர்ந்து பத்துத் தினங்கள் மஹோற்சவப் பெருவிழா
 சிறப்புத்திருவிழாக்களாக.
13.07.2013 சனிக்கிழமை கொடியேற்றம்
17.07.2013 புதன்கிழமை நடனத்திருவிழா
18.07.2013 வியாழக்கிழமை மாம்பழத்திருவிழா
19.07.2013 வெள்ளிக்கிழமை வேட்டைத்திருவிழா
20.07.2013 சனிக்கிழமை சப்பறத்திருவிழா
21.07.2013 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழா
22.07.2013 திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழா
23.07.2013 செவ்வாய்க்கிழமை பூங்காவனம்
 அனைவரும் வருக இறை தரிசனம் பெறுக,
 

சனி, 15 ஜூன், 2013

விநாயகர் வருடாந்த மகோற்சவம்

அச்சுவேலி பத்தைமேனி மீட்டிலான்கூடல் விநாயகப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 14.06.2013 கொடியேத்த திருவிழாவுடன் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகியது 8 வது திருவிழாவான சப்பறத்திரு விழாவும்,9 வது திருவிழா தேர்த்திருவிழாவும் ,10 வது திருவிழா தீத்தத்திருவிழாவும் நடைபெற்று இனிதே முடிவுறும் என்பதை அறியத்தருகின்றோம்,

வியாழன், 13 ஜூன், 2013

இறப்புத்தகவல்,திரு முத்தையா பாலசிங்கம்

 
ஈவினையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா பாலசிங்கம்(பாலர்) இன்று வியாழக்கிழமை (13.06.2013) காலமானார்.அன்னார் முத்தையா தங்கமுத்துவின் மகனும் சின்னம்மாவின்(சிறுப்பிட்டி) அன்பு கணவரும் ,சிவபாலினி ,சிவாஜினி ,சிவராஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அசோக்குமார், கிரிமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்.அசாங்கன் ,கிருஷ் ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகனம் :நாளை (14.06.13)வெள்ளிக்கிழமை மதியம் ஒருமணிக்கு ஈவினை விலங்கன் மயானத்தில் நடைபெறும்
 

சனி, 8 ஜூன், 2013

பயணிகளிடம் அபராதம் வசூலிக்கும் சுவிட்சர்லாந்து


 சுவிட்சர்லாந்து நாட்டில் வெளிநாட்டுப் பயணிகள் வாகனங்களை ஒட்டும் போது அரசு குறிப்பிட்டுள்ள வேக வரம்பை மீறினால் அபராதம் செலுத்துதல் அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சொந்த நாட்டிற்குத் திரும்பியிருந்தாலும் அவர்களது வீடு தேடி இந்த உத்தரவுக் கடிதம் தரப்படுகின்றது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து, இதுபோன்று போக்குவரத்து விதிமுறைகளை மீறிய இந்தியப் பயணிகளிடமும் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டு, 9 ஆயிரம் முதல் 53 அயிரம் வரையிலான அபராதத் தொகைகள் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை காவல்துறையின் குற்றவியல் பிரிவு, சர்வதேச காவல்துறையின் குழுவாக செயல்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் நீதிமன்ற உத்தரவுகள் இவர்களுக்கு அனுப்பப்படும். இங்குள்ள அயல்நாட்டுக் குற்றவாளிகளை அந்தந்த நாடுகளில் ஒப்புவிக்கும் பிரிவு, இந்த உத்தரவுகளை உரியவர்களிடம் சேர்க்கும்
 

பாரட்டு விழா மாண்புமிகு எம் கவிஞன்"


கலைஞன் என்று எவனும் பிறப்பதில்லை அவன் அவனிடம் உள்ள திறன் கடவுள் கொடுத்த வரமாகும் அந்த வகையில்தான் கவிஞன் தான் கற்றதையும் தனது கற்பனைத்திறனாலும் மக்கள் அங்கீகரிக்கிறார்கள்அதே போல் ஆலயங்களும் தங்கள் வளர்ச்சியோடு கலைஞர்களையும் வளர்த்தால் எம்மவர் கலையும் உயரும் அதற்கு உதார ணம் (ஸ்ரீ கனகதுர்க்கைஆலயம்) யேர்மனியில் சிறந்து விளங்கும் ஆலயங்களில் ஒன்றான சுவெ ற்றா ஸ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தினரால் கௌரவிக்கப்பட்ட குளந்தைக் கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள்
 யாழ்மண்ணில் ஆனைக்கோட்டை தந்த சிறந்த சிந்தனையாளர் என்று கூடக் கூறலாம்
 பல்துறைசார்ந்த ஒரு முன்டோடிக்கலைஞன் ஆன இவர்
 மலரும் மாலைகள் வீ டியோ பத்திரிகை நடத்துனராக வலம் வந்தவர் ஒளிப்பதிவாளனாக புகழ்கொண்டவர் யேர்மனியில் தமிழ் வானொலிகள் இல்லாத
 காலத்தில் உள்ளுர் வானொலி நடத்தியவர் பாரிசில் இருந்து ஒலிபரப்பான
 எ பி சி வானொலியின் ஒருமணித்தியால யேர்மன் நேரத்தை பல ஆண்டுகளாக நடத்தியவர் கவிஞராக சிறந்து விளங்குபவர் கண்ணில்கண்டதை
சிற்பமாக்கும் திறன் கொண்டவர் மட்டும் அல்ல எழுத்தாளர் பல மழலைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார் அவற்றில்சில பாடல்களாக வெளி வந்துள்ளது அவை புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையாக வெளிவந்துள்ளது
 இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்திருந்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி ஆவார் அவர் இவரின் பாடல் வரிகள் பற்றிப் பாராட்டினார்
 அத்தோடு ஐரோப்பாவில் முதல் முதல் வெளியான முழுமையான மழலைகளின் நம்மவர்படைப்பாகும் அதுமட்டுமல்ல இதில்பாடிய சிறுவர்கள் யேர்மனியில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இதில் கவிஞர் சிவநேசன் சுதந்தினி.தேவராசா சுதேதிகா.தேவராசா தேவிதா.தேவராசா தேனுகா.தேவராசா தேவதி. தேவராசா பாரத்.சிவனேசன் டிலக்சன்.சிவனேசன் தினேசன்.சிவனேசன் ஆகியோர் பாடியுள்ளனர் இதற்கான இசையை ஈழத்து இசைக்கவிஞன் இசைக்த்தென்றல் சிறுப்பிட்டி எஸ‌் தேவராசா அவர்கள் வழங்கி இருந்தார் இவ் இ‌சையமைப்பாளர் நோர்வேயில் உருவான முழுநீள வீடியோ படத்துக்கும் குறும் படங்களுக்கும் 10 மேற்பட்ட பக்திப்பாமாலைஇறுவெட்டுகளுக்கும் பல தேசியப்பாடல்களுக்கும் பற்பல மெல்லிசைப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் என்பது
 எம் ஈழமண்ணுக்குப் பெருமையாகும் கவிஞர் என். வி சிவநேசன் பல
 பக்திப்பாமாலைகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் குறிப்பாக டென்மார்க் அபிராமி அம்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை ஆகிய ஆலயப்பாடல்கள் எழுதியுள்ளார்அத்தோடு சிறுப்பிட்டி கிராமத்து பாட்டப்பா சைவப்பா என்ற பெரியார்கள் கௌரவிக்க சிறுப்பிட்டி மக்களுடன் ஊர் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் இணைந்து முன்வந்தபோது அத்தருணத்தில் கவிஞர் என்.வி.சிவநேசன் அவரது கவிதையின் ஆரம்பத்தால் முக்கவிஞர்களாக இணைந்து சுவிஸ‌் இணையக் கவிஞன் சிறுப்பிட்டி விமல் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ‌்.தேவராசா ஆகியோரால் இணைந்து உருவக்கப்பட்ட பாடல் இணையப்பரப்பில் இன்றும் உலாவருகின்றது கூறத்தக்கது இவர்கள் போன்றவர்கள்
 சிறந்தோங்க நம்மவர்களுக்கான களங்களின் கதவுகள் திறக்கப்படாமையே காரணம் சிந்தனையாளர்களுக்கு பரந்த வெளியில் திறந்துவைப்ப துயார்? எமது ஈழக்கலைஞர்களின் கலையை வளர்ப்பது யார்? இவரின்திறனுக்கான களம் இன்னும் கிடைக்கவில்லை தவமலர் சிவனேசன் அவர்கள் தயாரிப்பில் புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளை
 பின் காந்தக்குரலோன் கானமணி
 திரு .கணேஸ‌் தயாரித்து வெளிவந்துள்ள சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை பாமாலை டென்மார்க் அபிராமி அம்மன் பாமாலைகளே இவரை இனம் காட்டியுள்ளது என்பதே உண்மை அதனால் கலைவளர இணைந்து வளம் சேர்ப்போம் பேச்சோடு இருப்பது பலம் அல்ல செயல் ஆக்கினால் கலை உயரும் ஈழவர் கலைவளரும் இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதால் மிக்க மகிழ்ச்சி துளிர்த்துவளர்ந்துவரும்   கவிஞர் என்.வி.சிவநேசன் பணி உலகெங்கும்பரவ, எம், நவற்கிரி இணையங்களும் நிலா வதை  இணையமும் இணைந்து வாழ்க  வாழர வென மனம்ஆர வாழ்த்துகின்றோம்   மீண்டும் மற்றும் ஓர் வளரும் கலைஞருடன் ‌ இணைவோம், பல புதிய ,புதிய , இசைக்கவிஞர்களையும்  கலைஞரையும் ஊக்கிவித்து உயர்வுற  சிரமம் பாராது தன்நலம்அற்ற எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கும் கலை மேதை எம் உறவான   இசைக்கவிஞன் சிறுப்பிட்டி {யேர்மனி}எஸ‌்.தேவராசாஅவர்களுக்கு எமது நவற்கிரி இணையங்கள், தேவன் ராஜாகுடும்பத்தின் நல் வாழ்த்துக்களும்   பாரட்டுக்களும் உரித்தாகுக,, நன்றி "",

மாதா வின் பாடல்கள்