18

siruppiddy

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

இனிதே நடைபெற்று முடிந்த சிறுப்பிட்டி ஒன்றியக்கூட்டம்

நேற்று மலை(15.02.14) ஏற்கனவே அறிவித்தபடி சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தின் நிர்வாகக்கூட்டம்
குறிப்பிட்ட இடத்தில் குறித்த நேரத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பித்து இன்றைய நிலைமையில் கிராமத்தில் உடனடியாக முன்னெடுக்க வேண்டிய முன்னெடுப்புக்கள், ஒன்றியத்தின் விரிவாக்கம், சிறுப்பிட்டி கிராமத்தின் தற்போதைய யதார்த்த நிலைமைகள், அதன் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய நீண்டகால திட்டங்கள் ,ஏற்கனவே முன்னெடுத்த பணியின் பலாபலன்கள்,போன்றன மட்டுமல்லாது கிராமத்தின் ஒன்று பட்ட ஒற்றுமையுடன் கூடிய முன்னெடுப்புக்களுக்கு மட்டுமே முன்னுருமை கொடுத்து அதற்க்கு செயல் வடிவம் கொடுப்பதென ஒட்டுமொத்த அங்க்கதவர்களும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தி அதற்க்கான இரு நிகழ்வுகளையும் முன்மொழிந்து நிறைவேற்றி இருந்தது இக்கன்னி அமர்வின் சிறப்பம்சம்.

இவை இரண்டும் செயல்முறைப்படுத்த ஊரில் உருவாக்கப்பட்டுள்ள செயற்பாட்டு குழுவினருக்கு உடனடியாக தெரியப்படுத்தி தேவையான ஒழுங்குகள் ஆரம்பிக்கபடவுள்ளது. வேறுபல நற்பணிகளும் ஒன்றியத்தின் மேலதிக திட்டங்கள் வரைவுகள் தகவல்கள் நாளை மறுதினம் முழுமையாக பதிவிடப்படும்.

நவற்கிரி சிறுப்பிட்டி இணையத்தின் வாழ்த்துக்களும் பங்களிப்புடனான ஆதரவும் இதுபோன்ற நடை முறைக்கு சாத்தியமான திட்டங்களை முன்வைத்து செயல் பட இருக்கும் இவ் அமைப்பினருக்கு என்றும் உண்டு. தொடர்க உங்கள் தொண்டு….

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

மாதா வின் பாடல்கள்