18

siruppiddy

வியாழன், 10 ஜூலை, 2014

இராசையா நவரட்ணராஐா அவர்களின் பூதவுடல் அடக்கம்


 10.07 .2014 அடக்கம் செய்யப்பட்டது
இராசையா நவரட்ணராஐாஅவர்கள் காலமானார்.அன்னார் பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட் டி வடக்கில் மணம்முடித்து வாழ்ந்து வந்தவரும். பலகாலம் சுவிசில் வாழ்ந்து பின்பு  சிறுப்பிட்டியில் வாழ்ந்தார் இவர் (05.07.2014) காலமானார் என்பது எமது இணைய உறவுகளுக்கு நாம் அறியத்தந்ததே,
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று நிறைவாகியுள்ளது என்பதனை
 இங்கே அறியத்தருவதோடு அவருக்கான அஞ்சலியை ஊர் வாழ் உறவுகள் சார்பிலும் உலகம்வாழ்  உறவுகள் சார்பில் கூறி நிற்கிறது
யாழ் போக்கு வரத்துச் சேவையில் நடத்துனராகவும்.
பொதுப்பணிகளில் பணிபுரிந்தவரும்
 மனித நேயம் உள்ளவரான நவரட்ணராஐா
 உங்கள் இழப்பு உங்கள் குடும்பத்தினரை
 மட்டுமல்ல உறவுகளை மட்டுமல்ல,
ஊர்வாழ் மக்களை மட்டுமல்ல
 புலத்தில் வாழும் உங்கள் நேசங்களை
 நெஞ்சுருக வைத்துள்ளது
உறவோடும் உரிமையோடும் பளகிய அன்பன்
 சிரித்த முகத்தோடு உலவிய நண்பன்
 வருத்தம் வந்ததுவோ வாழ்வைவிட்டு பிரித்ததுவோ.?
இனிக்கப்பேசியவன்
 இன்பமாய் பளகியவன்
 இயமன் அழைத்திட சொல்லாமல் போனதெங்கே ?
புலத்தில் வாழ்ந்தவன் நீ
 தாய் நிலத்தில் உறவோடு வாழ்வது மனத்தில் மகிழ்வுதர
 நிலத்தில் உயிர் போன செய்தி இணையத்தில் ஏன் ஐயா .?
வாழ்வில் பிரிவு தாங்கமுடியாத வலி
 வாழ்கைத்துணைவி பிரிந்து வாடுவது பெரும் வலி
 ஆனாலும் அன்பரே உமது ஆத்ம சாந்திக்காகவும்
 உங்கள் குடும்பத்தினர் அமைதிக்காகவும் வேண்டி நிற்கிறோம்
  

செவ்வாய், 1 ஜூலை, 2014

சிறுப்பிட்டி ஒன்றிய கௌரவிப்பு நிகழ்வின்


சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றியத்தினர் இறுதியாக சிறுப்பிட்டிக்கிராமத்தில் மூன்று சமைய சமூக ஆர்வலர்களை கௌரவித்து இருந்தனர் அதன் கானொளி வடிவத்தை இணையம் உலகவாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்காக பதிவிடுகின்றது.இதன் மேலதிக தகவல் விரைவில் இணைக்கப்படும்.

மாதா வின் பாடல்கள்